Monday, October 14, 2013

ராமனாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவை நீக்ககோரி ஆர்பாட்டம் : 156 பேர் கைது


அக்டோபர் 30-ல் தேசிய தலைவர் ஐயா ”பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்” அவர்களின் குருபூஜை விழாவிற்கு செல்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தளர்த்தக்கூறியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய 144 தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் ”ஒருங்கினைந்த தேவர் சமுதாய அமைப்புகள்” சார்பாக, இன்று சிவகாசி ரிசர்வ்லையனில் உள்ள தேசிய தலைவர் ஐயா ”பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்” அவர்களின் திரு உருவச்சிலை முன்பு ஆர்பாட்டம் நடக்கிறது. இதில் பெருந்திரலானோர் கலந்துகொண்டனர். இந்த உத்திரவை வாபஸ் பெறக்கோரி சிவகாசியில் தேவர் அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்பாட்டம் நடத்தினார்கள்.ஆர்பாட்டம் நடத்துவதற்கு காவல்துரையிடம் அனுமதி வாங்கவில்லையாம். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லயன் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு செந்தூர்பாண்டி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அனுதிபெறாமல் ஆர்பாட்டம் நடத்தியதாக 156 பேரைசிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

No comments: