Saturday, October 26, 2013

தேவர் ஜயந்தி: பாதயாத்திரை செல்ல அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு.

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜயந்தி விழாவுக்கு பாதயாத்திரையாகச் செல்ல அனுமதி வழங்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீ தேவர் குருபூஜை பக்தர்கள் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கமிட்டி தலைவர் எம். மகேஸ்வரன், துணைத் தலைவர் கே.சி. திருமாறன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினர். அந்த மனுவில், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு ஆண்டுதோறும் பாதயாத்திரையாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறோம். இப்போது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், குருபூஜை பக்தர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். குரு பூஜைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. .

No comments: