Wednesday, October 23, 2013

தேவர் ஜயந்தி: சொந்த வாகனங்களில் செல்வோர் கவனத்துக்கு...

தேவர் ஜயந்தி விழாவுக்குச் செல்வோர், தங்களது வாகனத்தின் ஆவண நகல்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒவ்வோர் ஆண்டும் அக்.30 ஆம் தேதி, தேவர் ஜயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவுக்கு மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் பசும்பொன் சென்று ஏராளமானோர் நினைவஞ்சலி செலுத்துவர். இதன்படி, வரும் அக்.30 ஆம் தேதி பசும்பொன் கிராமத்துக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்குச் செல்ல விரும்புவோர், கோரிக்கை மனுவுடன் தங்களது வாகனப் பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் காப்பீட்டு உரிமம் ஆகியவற்றின் நகல்களுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொடுத்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments: