Tuesday, October 22, 2013

பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது.

மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 50 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கோச்சடைப் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து வெற்றிக்குமரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டதாக எஸ்.எஸ்.காலனி போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. .

No comments: