Tuesday, October 8, 2013

என் சமூக மக்களே என் வீட்டு முன்பு போராட்டம் நடத்துகின்றனர் - கருணாஸ் வருத்தம்


நடிகர் கருணாஸ் வேறொரு ஜாதியை சேர்ந்தவர் அவர் தன்னை தேவர் சமூகம் என்று சொல்லி அந்த மக்களை ஏமாற்றுகிறார் என்று ஒரு புலனாய்வு வார இதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து தேவர் பேரவையினர் கருணாஸ் வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நடிகர் கருணாஸ் தனது மனைவி கிரேசுடன் போலீஸ் கமிஷனரை சந்தித்த ஒரு மனுகொடுத்துவிட்டு தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது இயற்பெயர் கருணாநிதி. சினிமாவுக்காக கருணாஸ் என்று சுருக்கி வைத்துள்ளேன். நான் முக்குலத்தோர் பிரிவில் ஒன்றான அகமுடையார் வகுப்பை சேர்ந்தவன். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தாஞ்சூர்தான் சொந்த ஊர். எங்கள் ஊரில் 2 ஆயிரத்து 500 தலக்கட்டுகள் உள்ளது. சென்னையிலேயே எனது உறவினர்கள் வாழ்கிறார்கள். அப்படி இருக்கும்போது எனது பிறப்பை ஒரு வார பத்திரிக்கை கேலி செய்துள்ளது. அதன் மீது சட்டப்படி வழக்கு தொடர இருக்கிறேன். இதை உண்மை என்று நம்பிய என் சமூகத்து மக்களே என் வீட்டு முன் போராட்டம் நடத்துகிறார்கள். முக்குலத்தோர் புலிப்படை சமூக சேவை அமைப்பு இதன் மூலம் இளைஞர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். 26 மாவட்டங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. என் வீட்டு அருகில் போராட்டம் என்ற பெயரில் தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டிருக்கிறேன். என்றார்.

No comments: