Saturday, October 26, 2013

பசும்பொன்னுக்கு செல்வோர் வாகன அனுமதி பெற நாளை கடைசி

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜைக்கு செல்வோர் வாகன அனுமதி பெற ஞாயிற்றுக்கிழமை (அக்.27) கடைசி நாளாகும். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் இப்போது 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் தேவர் குருபூஜைக்கு செல்வோர் கண்டிப்பாக வாகன அனுமதிச் சீட்டு பெற்றுச் செல்ல வேண்டும். அவ்வாறு சொந்த வாகனத்தில் செல்லும் நபர்கள் அவர்களது சரகத்தில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமை (அக்.27)-க்குள் வாகன அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. .

No comments: