Saturday, October 12, 2013

தேவர் குரு பூஜை ஆலோசனை கூட்டம்


ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்., 30ல் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை நடக்கவுள்ளது. இதையொட்டி, கலெக்டர் நந்தகுமார் தலைமையில் அனைத்து சமுதாய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்டத்தில் தற்போது, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், அக்., 25 முதல் 31ம் தேதி வரை வாடகை வாகனங்கள், டிராக்டர், டூவீலர்கள், ஆட்டோக்களில் செல்ல அனுமதி கிடையாது. பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் வரவேண்டும்.இதுபோன்ற வாகனங்களுக்கு, அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி சான்று வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து, செல்ல வேண்டும். வரம்பு மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என வலியுறுத்தப்பட்டது. எஸ்.பி., மயில்வாகனன், டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments: