Tuesday, October 22, 2013

சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு


மருதுபாண்டியர் குருபூஜைக்காக, பாதுகாப்பு கருதி, 144 தடை உத்தரவு பிறப்பித்து, கலெக்டர் ராஜாராமன் உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் மருதுபாண்டியர் அரசு நினைவு இல்லத்தில், அவர்களது சிலைகளுக்கு, அக்.,24ல் அஞ்சலி செலுத்தப்படும். அக்.,27ல் காளையார் கோவிலில் உள்ள, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவர். இவ்விரு தினங்களில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில்,வாடகை வாகனங்களில் வரக்கூடாது. அரசியல் கட்சியினர் 3 வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. நினைவிடத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரம் மட்டுமே ஜோதி எடுத்துச் செல்ல வேண்டும். ஊர்வலமாக செல்லக்கூடாது. மாவட்ட நிர்வாகம் விதித்த, விதிமுறைகளுக்கு மேல் நடந்து கொள்ள, அரசியல் கட்சிகள், நினைவிடம் செல்வோருக்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்குமாறு,எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ராஜாராமன், உத்தரவிட்டார். இந்த உத்தரவு இம்மாத இறுதி வரை அமலில் இருக்கும்.

No comments: