Tuesday, October 1, 2013

முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் மாலைராஜா, திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் 4-ல் திங்கள்கிழமை ஆஜரானார். சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி திருநெல்வேலி நகரத்தில் 22-10-2011-ல் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீஸாரின் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் மாலைராஜா, உலகநாதன், ஜவாஹர், பழையபேட்டை துரை உள்பட 24 பேர் மீது திருநெல்வேலி நகரம் போலீஸார் வழக்குப்பதிந்தனர். இதுகுறித்த வழக்கு திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் 4-ல் நடைபெற்று வருகிறது. இவ் வழக்கு தொடர்பாக மாலைராஜா உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆஜராகினர். நீதிபதி ஆர்.சுந்தரய்யா , வழக்கை அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். .

No comments: